திங்கள், 7 மார்ச், 2011

"நம்மை விட்டு விலகாதது புத்தகங்கள் மட்டுமே" - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

னித குலத்துக்கு வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து கொடுத்துள்ள ஒரே நூல் திருக்குறளாகும். இதனை கற்பதன் மூலம் அதன்வழி நின்று மனதில் உள்ள அழுக்குகளை களையவும், ஐயங்களை போக்கவும் அனைவரும் முன்வரவேண்டும். உறவுகள், நட்புகள் கூட்டம் நம்மை விட்டு விலகலாம். ஆனால், நம்மை விட்டு என்றுமே விலகாதது புத்தகங்கள் மட்டும் தான்.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அத்தனை நூற்றாண்டுகளிலும் ஜாதி, மத, இன, மொழிகளை தாண்டி மனிதர்களை மனிதர்களாக வழிநடத்துகின்ற ஆற்றல் பெற்ற ஒரே நூல் திருக்குறள் தான். எனவே திருக்குறளை அனைவரும் கற்கவேண்டும். நாம் கற்பதோடு மட்டுமின்றி நமது எதிர்கால சந்ததியினர் கற்பதற்கான வழிமுறைகளையும் நாம் உருவாக்கவேண்டும். இதன் மூலம் சிறந்த சமுதாயம் உருவாகும்.

நன்றி: தினமலர்

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...