திங்கள், 27 ஜூன், 2016

மீண்டும் நான் வாழ்ந்து பார்க்கிறேன்

மீண்டும் நான் வாழ்ந்து பார்க்கிறேன்
எனக்கு வயதாகி விடவில்லை;
கை வரை வந்து
காணாமல் போகும் வெற்றிகளே
என் கால்களில் தளையாய்
கனத்துக் கிடக்கும் தோல்விகளே
மலைகளில் ஏறியவனை
சமவெளியில் உருட்டிவிட்ட சரளைக்கற்களே
மீண்டும் நான் வாழ்ந்து பார்க்கிறேன்
எனக்கு வயதாகி விடவில்லை.

                       - மு. மேத்தா

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...