திங்கள், 7 பிப்ரவரி, 2011

வாழும் வரலாறு: பி. சுசீலா

இயற் பெயர்: புலப்பாக்க சுசீலா

பிறப்பு: நவம்பர் 13 1935 (அகவை 75)

பிறந்த ஊர்: விஜயநகரம், ஆந்திரா

வசிப்பது: சென்னை

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 2500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
.
வாழ்க்கைச் சுருக்கம்:

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.

பி.சுசீலா அம்மையாருடன்  நான்
19 பிப்,2010 அன்று - அபுதாபியில்

இசைத் துறையில்:

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது 'பெற்ற தாய்' படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து 'பெண்டியாலா நாகேஸ்வரராவின்' இசையமைப்பில் 'எதுக்கு அழைத்தாய்?' என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.

பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் சிறந்த பாடகிக்கான பரிசை முதல் முறையாகப் பெற்றார்.  பின்னர், தமிழக அரசால் கலைமாமணி பட்டம் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார். இவருக்கு மொத்தம் ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

இசைக்குயில்:

கடந்த 60களிலும், 70களிலும் தென்னிந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த குயிலின் இசையை கேட்காதவர்களே இல்லை; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற நான்கு மொழிகளில் உள்ள இசை ரசிகர்களை தன் இனிய குரலினால் கட்டிப்போட்டு வைத்த பெருமை இவருக்கு உண்டு.

தென்னிந்திய லதாமங்கேஷ்கர் என்று அழைக்கப்படுபவர். அமைதியான தோற்றம்... கொஞ்சும் தமிழ் பேச்சு... போன்றவைகளுக்கு சொந்தக்காரர்.

இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ இயற்கையிலே பி.சுசீலாவிற்கு இசையின் மேல் ஓர் ஆர்வம். இவரின் இசை ஆர்வத்தை கண்ட இவரது குடும்பத்தினர் அவருக்கு கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். இதன் விளைவு சிறுவயதிலேயே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பு பெற்றார். அதில் வெற்றியும் பெற்று வந்தார். இந்நிலையில் விஜயநகரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்த சுசீலா இசைக்கான டிப்ளமோ பட்டத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் அகில இந்திய வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கான வாய்ப்புகள் சுசீலாவிற்கு கிடைக்க வானொலியில் சுசீலாவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

அன்றைய காலக்கட்டத்தில் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பளராக விளங்கிய நாகேஸ்வரராவ் அவர்கள் தன் இசையமைப்பில் பாடுவதற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். புதிய குரலுக்காக அகில இந்திய வானொலியை அவர் அணுக, வானொலி நிலையத்தார் அவரிடம் ஐந்து நபர்களை அனுப்பினார்கள். அந்த ஐந்து நபர்களில் ஒருவர் பி.சுசீலா. பல்வேறு தேர்வுகளுக்கு பிறகு சுசீலாவின் குரல் தேர்வு செய்யப்பட்டது.

முதன் முதலாக சுசீலாவின் குரல் 1952ல் திரைக்கு வந்த 'பெற்றதாய்' படத்தின் மூலம் ஒலிக்கத் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் 'கன்னத்தலி' என்ற பெயரில் வெளிவந்தது. ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் ஜி. வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் எ.எம். ராஜாவுடன் இணைந்து சுசீலா பாடிய முதல் பாடல் 'எதுக்கு அழைத்தாய்...' என்பதாகும்.

இதன் பிறகு சுசீலா ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். ஏவிஎம் நிறுவனம் இதற்காக சுசீலாவிற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக அளித்தது. ஏவிஎம் நிறுவனர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு எப்போதுமே எல்லாம் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் அவர் சுசீலாவின் தமிழ் உச்சரிப்பும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் சுசீலாவிற்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதற்காக தமிழாசிரியர் ஒருவரை நியமித்தார். அந்தளவிற்கு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுத்தமான உச்சரிப்புடன் பாடுகின்ற போதுதான் அந்தப் பாடல் வரிகள் மக்கள் மனதை தொடும்.. வெற்றி பெறும் என்ற எண்ணமும் அன்றைய காலத்தில் நிலவி இருந்தது.

இதற்கிடையில் 1955ல் திரைக்கு வந்த 'கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தில் வரும் பாடல்கள் மூலம் சுசீலா தமிழகம் எங்கும் பிரபலமடைந்தார். குறிப்பாக அப்படத்தில் வரும் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது...', 'உன்னை கண் தேடுதே...' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் பிறகு அதே வருடம் திரைக்கு வந்த 'மிஸ்ஸியம்மா' பாடல்களான 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...', 'அறிய பருவமடா...' போன்ற பாடல்கள் சுசீலாவிற்கு மேலும் புகழ் சேர்த்தன.

சுசீலா சினிமாவில் பாட வந்த காலத்தில் பி. லீலா, ஜிக்கி, எம்.எல். வசந்தகுமாரி என்று பல பிரபல பாடகிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருந்தனர். இவர்கள் மத்தியில் சுசீலா தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி தன் இனிமையான குரலினால் தென்னந்தியா முழுவதும் ஓர் அதிர்வு அலையை ஏற்படுத்தினார் என்றால் அதுமிகையல்ல.

1955ல் தொடங்கிய இவரது நீண்ட இசை பயணத்தில் 1960 - 1970 வரை முக்கிய காலகட்டம் எனலாம். ஆம் இந்தக் காலக்கட்டத்தில் திரைக்கு வந்த அனைத்து படங்களிலும் சுசீலாவின் பாடல்கள் இல்லாமல் இருந்தது இல்லை. சுசீலாவின் கானகுரல் தென்னிந்திய மொழிகளில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

பல்வேறு மாநில விருதுகளும், தேசிய விருதுகளும் சுசீலாவை தேடி வந்தன. தொடர்ந்து 1969, 1971, 1977, 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பாடகிக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி கெளரவப்படுத்தியது.

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலின் மூலம் தமிழில் முதல் தேசிய விருது பெற்ற சுசீலா எண்ணற்ற நெஞ்சங்களில் இன்றும் நீங்கா இடம் பெற்றவர் என்றால் அதுமிகையல்ல. மேலும் சிவாஜிகணேசன், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தில் வரும் 'சிட்டுக்குருவிக்கென...' என்ற பாட்டும் இவருக்கு தேசிய விருதினை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன் என்று அன்றைய இசையமைப்பாளர்களின் இசையில் மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இன்றைக்கு பிரபலமாக விளங்கும் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமை சுசீலாவிற்கு உண்டு.

சினிமாவில் பி. சுசீலா பாட வந்து 50 வருடங்கள் உருண்டோ டிவிட்ட நிலையில் 2008ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதினை சுசீலாவிற்கு வழங்கி அவரை மேலும் கெளரபடுத்தியது மத்திய அரசு.

''இன்றைக்கு சினிமாவிற்கு பாடவரும் பாடகர்களும், பாடகிகளும் சினிமாவிற்கு பாட வருவதற்கு முன்பு ஒருமுறை சுசீலாவின் பாடல்களை கேளுங்கள். தமிழ் மொழியை எப்படி உச்சரிக்க வேண்டும்; எப்படி பாட வேண்டும் என்பதை சுசீலாவின் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.. அதன் பிறகு சினிமாவில் பாட வாருங்கள்.. ''என்று ஒரு நிகழ்ச்சியில் சுசீலாவைப் பற்றி கவிஞர் வைரமுத்து கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

காலங்கள் உருண்டோடி போனாலும்.. புதிய புதிய பாடல்கள்.. புதிய புதிய குரல்களில் வந்தாலும் இந்த குயிலின் 'மயங்குகிறாள் ஒரு மாது..', 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே..', 'சொன்னது நீதானா..' போன்ற நெஞ்சை வருடும், மயக்கும் குரல் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இல்லத்தில் நேற்றும், இன்றும், என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

விருதுகள்:

இந்திய அரசின் பத்ம பூஷன் விருது - ஜனவரி 2008

தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகி விருது ஐந்து தடவைகள்

ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது (2001)

சுசீலா அம்மையார் பாடிய, காலத்தால் அழியாத, அவசியம் கேட்டு ரசிக்க வேண்டிய,  புகழ் வாய்ந்த பாடல்கள் இவை:

ஆலயமணியின் ( பாலும் பழமும் )
யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )
பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )
காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )
முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )
பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
தூது செல்ல ( பச்சை விளக்கு )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )
சிட்டுக்குருவி ( புதியபறவை )
அத்தை மகனே ( பாத காணிக்கை )
கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )
ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )
ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
உன்னைக் காணாத ( இதய கமலம் )
என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )
கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )
மலரே மலரே ( தேன் நிலவு )
மன்னவனே ( கற்பகம் )
நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )
காதல் சிறகை ( பாலும் பழமும் )
ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )
தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )
காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )
அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
உன்னை ஒன்று ( புதிய பறவை )
என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )
காண வந்த ( பாக்யலெட்சுமி )
மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )
பச்சை மரம் ( ராமு )
தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )
இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
வெள்ளிக்கிழமை ( நீ )
ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )
மதுரா நகரில் ( பார் மகளே பார் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )
மெளனமே பார்வையால் ( கொடி மலர் )
பால் வண்ணம் ( பாச மலர் )
போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
ஒருத்தி ஒருவனை ( சாரதா )
ஒரே கேள்வி ( பனித்திரை )
நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )
யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )
மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )
என் கண்மணி ( சிட்டுக்குருவி )
விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )
மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )
வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )
அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )



நன்றி: விக்கிபீடியா


கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...