சனி, 28 ஜனவரி, 2017

ஜேம்ஸ்_ஆலன்.

#ஜேம்ஸ்_ஆலன்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
உங்கள் மனச் சாட்சி 
சொல்வதையே
நம்புங்கள்.
**
மனம் தெய்வீகமானது
அதன் குரலுக்கு
செவிகொடுங்கள்.
**
நிம்மதியான மனதிற்கும்
அச்சமற்ற செயலுக்கும்
உங்கள் உள்ளொளி
வழிகாட்டும்.
**
உங்கள் எண்ணத்திற்கும்
முயற்சிக்கும் ஏற்றபடி
உங்கள் எதிர்காலத்தை
அறுவடைசெய்யலாம்.
**
பிரபஞ்ச விதிகள்
என்றும் தவறுவது இல்லை.
**
உங்கள் தொழிலைச் சரியாக
புரிந்துகொள்ளுங்கள்
அது "உங்கள் தொழிலாக" இருக்கட்டும்,
உங்கள் உள்ளுணர்வின்
வழிகாட்டுதலின்படி
நீங்கள் தொடர்கையில்
வெற்றிமேல் வெற்றி
தொடர்ந்து குவியும்.!

சனி, 21 ஜனவரி, 2017

பேலியோ டயட் - சர்வ ரோக நிவாரணியா?

21/01/2017 அன்று வெளியான ஹிந்து நாளிதழில்
"பேலியோ டயட் - சர்வ ரோக நிவாரணியா?"
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கான மறுப்பு / விளக்கமாக இக்கட்டுரை.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
கட்டுரையின் கருத்துகளில் நான் மாறுபடும் விசயங்களை கூறுகிறேன்.
பேலியோ சில மூடநம்பிக்கைகள்
எனும் சிறு தலைப்பின் கீழ்
// பேலியோ பல நோய்களை கட்டுப்படுத்தும் . சில நோய்களை வரவழைக்கும்// என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உணவு முறை என்பது நமது முன்னோர்கள் பல லட்சம் வருடங்களாக உண்டு வந்த உணவு முறை.
இடையில் பத்தாயிரம் வருடங்களாகத் தான் சர்க்கரை, அரிசி, கோதுமை வந்தன. அதிலும் கடந்த நூற்றாண்டில் தான் ரீபைன்டு செய்யப்பட்ட தானியங்கள் , சீனி, குளிர்பானங்கள் உள்ளே வந்தன.
இதையெல்லாம் உண்ணாத மனிதன் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தான். ஆகவே நவீன கால உணவு முறை நமது ஜீன்களில் தேவையற்ற ஊறு செய்யும் மாற்றங்களை ( mutations) கொண்டு வந்து, நம்மை நோய்களின் கூடாரமாக்கிவிட்டன.
மீண்டும் நாம் முன்னோரின் உணவியலை ஏற்று நடக்கும் போது நாகரீக மனிதனின் பல நோய்கள் குணமாகின்றன.
இது உண்மை.
பல நோய்கள் பேலியோவால் வருகின்றன என்ற கூற்றில் நிச்சயம் உண்மை இல்லை.
ஏனெனில் கொழுப்பை மனித இனம் அறவே ஒதுக்கியது கடந்த அரை நூற்றாண்டு காலமாய்த்தான்.
கொழுப்பு உணவை ஒதுக்கி வைத்து விட்டு நாம் சாதித்தது ஒன்றுமில்லை.
அது ஒரு பூச்சாண்டி வேலை என்பது மெல்ல மெல்ல இப்போது தான் தெரிய ஆரம்பிக்கிறது.
நம் உணவு முறையில் கொழுப்பு பிரதானமாகவும் புரதச்சத்து தேவையான அளவும் மாவுச்சத்து குறைவாகவும் உள்ளது.
இப்படி உண்ணும் போது நம் உடல் பொலிவுடன் இளமைத்துடிப்புடன் செயல்படுவதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
இதை வாழ்க்கையில் நடைமுறை படுத்தாத மக்கள் தான் தேவையற்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர் என்பது திண்ணம்.
//மேலும், இந்த கட்டுரையில் டைப் 2 டாயபடீஸ் மக்கள் தான் இந்த டயட்டால் பயனடைவார்கள். டைப் 1 க்கு இதனால் தீர்வில்லை என்று கூறியுள்ளார்//
தவறு.
நீரிழிவில் இருவகை .
ஒன்று டைப் 1 - இவர்களுக்கு பிறவியில் இருந்தே இன்சுலின் சுரப்பு நிகழாது அல்லது மிக மிக குறைவான அளவு சுரக்கும்
இவர்களுக்கு நாம் வெளியில் இருந்து இன்சுலின் கொடுக்க வேண்டும்.
டைப் 2 - இது வாழ்கையின் ஓட்டத்தின் பாதியில் நம்மை வந்து அடைவது. இதில் இன்சுலின் நன்றாக சுரந்தாலும் வேலை செய்யாது( insulin resistance) அல்லது இன்சுலின் சுரக்கும் செல்கள் பழுதாகி அதனால் இன்சுலின் போதிய அளவு இல்லாமை. ( beta cell failure)
பேலியோ டயட் இவர்கள் இருவருக்கும் நன்றாக வேலை செய்யும். எப்படி?
டைப் 1 நபர்களுக்கு நாம் வெளியில் இருந்து கொடுக்கும் இன்சுலினின் தேவையை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விடும். மேலும், நீண்ட நாள் ஓட்டத்தில் சர்க்கரையை அருமையாக கன்ட்ரோல் செய்து நீரிழிவின் நீண்ட நாள் பிரச்சனைகளான சிறுநீரக அழற்சி, ரெடினோபதி போன்றவை வராமல் தடுக்கும்.
HbA1C ( மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு) தொடர்ந்து நல்ல நிலையிலேயே மெய்ட்டெய்ன் ஆகும்.
ஆகவே டைப் 1க்கு நண்பன் இந்த பேலியோ டயட்.
// சிறுநீரகங்களிலும் கல்லீரலிலும் பிரச்சனை இருந்தால் பேலியோ டயட்டை எடுக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்//
உண்மை. நமது முந்தை அதிகமான மாவுச்சத்து உணவு முறையால் கல்லீரலில் கொழுப்பு படிந்து fatty liver இருக்கலாம், அல்லது hepatitis B போன்ற வைரஸ் தொற்று கல்லீரலில் இருக்கலாம். கிட்னிகள் பிரச்சனையாக இருக்கலாம்.
இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு தான், பேலியோ தொடங்கும் முன் ஒரு ரத்த பரிசோதனை அவசியம் என்கிறோம்.
மேலும் பிரச்சனைகளின் தீவிரத்தை பொறுத்து இந்த உணவு மாற்றம் தேவையா இல்லையா என்பதை தெரிவிக்கிறோம்.
சிறுநீரக பிரச்சனையை medical renal disease என்கிறோம் . இதில் நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக நோயை diabetic nephropathy என்கிறோம்.
இந்த diabetic nephropathyக்கு முக்கிய காரணம் - ரத்ததில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து அதிகமாக இருப்பது.
இதை பேலியோ சரி செய்யும்.
எனவே கிட்னிகள் மீண்டும் குணமாகும்.
ஆனால் , அது கிட்னிகள் எந்த அளவு சேதாரத்துக்கு உட்பட்டிருக்கிறது என்பதைப்பொறுத்தது.
ஆரம்ப கட்ட பிரச்சனையாக இருப்பின் சரியாகும். End stage renal diseaseஐ சரி செய்ய எந்த மருத்துவ முறையாலும் இயலாது என்பதே இப்போதைய நிலை.
சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை ஆராய்ந்து அதைப்பொறுத்து protocol வகுக்கப்பட்டு புரதச்சத்தின் அளவுகளை குறைத்து கொடுக்கிறோம். ஆகவே கிட்னிகள் மேற்கொண்டு பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
கல்லீரல் பிரச்சனைகளில் fatty liver எனும் கல்லீரலில் கொழுப்பு படிந்து காணப்படும் நிலை என்பது பின்னாளில் கல்லீரல் சுருக்க நோயக்கு வழிவகுக்கலாம். பேலியோ உணவு முறையில் fatty liver ரிவர்ஸ் ஆகிறது. குணமாகிறது.
Hepatitis B carrierகளாக உள்ளவர்களுக்கு உள்ளே வைரஸ் இருப்பதாலும் அது நோய் கிருமி தொற்று வகையில் வருவதாலும் அதற்கு பேலியோ தீர்வு தராது.
Hepatitis B உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை எடுக்கவேண்டும்.
// பேலியோ புற்று நோயை எல்லாம் குணப்படுத்த வாய்ப்பே இல்லை//
தவறு. புற்று நோயை உண்டாக்கும் செல்கள் தாங்கள் வளர தீனியாக விரும்பி உண்பது க்ளூகோஸை மட்டும் தான்.
நாம் பேலியோவில் க்ளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமான உணவுகளை உண்ணாமல் இருப்பதால், ரத்ததில் க்ளூகோஸ் அளவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
மேலும், நாம் கீடோன்களில் இயங்குவதால் நமக்கு க்ளூகோஸ் தேவையும் படாது.
க்ளூகோஸ் இன்றி கேன்சர் செல்கள் பட்டினி கிடந்து உயிர்விடும். பல்கிப்பெருகுவது நின்று விடும்.
உலகம் முழுவதும் செய்யப்படும் ஆய்வுகள் கீடோஜெனிக் டயட் கேன்சருக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும் என்கின்றன.
(https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4215472/)
மேலும், ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால்(hyperinsulinemia) இன்சுலின் அதிகம் சுரந்து கொண்டே இருக்கும்.
இன்சுலின் அதிகமாக சுரந்தால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு.
ஆகவே பேலியோ டயட் உங்களை கேன்சர் வராமலும் காக்கிறது.
(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/22215126/)
//பேலியோவில் பிரதானமாக புரதம் தான் வலியுறுத்தப்படுகிறது. 65 சதவிகிதம் புரதம். 30 சதவிகிதம் கொழுப்பு/ 5 சதவிகிதம் மாவுச்சத்து என்று கூறப்பட்டுள்ளது//
தவறு. பேலியோவில் 60-70 சதவிகிதம் கொழுப்பு , 25 சதவிகிதம் புரதம், 5 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டை வலியுறுத்துகிறோம்.
புரதச்சத்தை ஒருவருக்கு அவரது எடைக்கு ஏற்ப எவ்வளவு தேவையோ அதை மட்டுமே உண்ணச்சொல்கிறோம்.
( ஒரு நபருக்கு அவரது எடையில் ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1 முதல் 1.5 கிராம் புரதச்சத்து தினசரி கட்டாயத் தேவை)
புரதச்சத்து நிரம்பிய உணவுகள்
1. மாமிசம்
2. முட்டை
3. கொட்டைகள்
4. பனீர்
5. சீஸ்
அசைவர்களுக்கு மாமிசம் உண்பதால் புரதம் கிடைத்து விடுகிறது.
முட்டை உண்ணும் சைவர்களுக்கு தினமும் முட்டைகள் எடுப்பதால் புரதம் கிடைத்து விடுகிறது.
முட்டை கூட உண்ணாத சைவர்களுக்கு , பாதாம் போன்ற மரக்கொட்டைகள், பனீர், சீஸ் போன்ற பொருட்களின் மூலம் புரதச்சத்து கிடைக்கிறது.
மிருகங்களின் மூலம் கிடைக்கும் புரதச்சத்தை animal protein என்கிறோம்.
மாமிசம், முட்டை , பால் போன்றவை மிருக புரதச்சத்துகள்.
தாவரங்கள் மூலம் கிடைப்பவை plant proteins .
இதில் animal proteins தான் நமது உடலில் நல்ல முறையில் செரிமானம் ஆகி உடலில் சேருகிறது . இதை bio availability என்போம். Plant proteins கள் குறைந்த பயோ அவாய்லபிலிட்டி கொண்டவை . அதனால் தான் பேலியோவில் மாமிசம், முட்டை, பால் பொருட்கள் வலியறுத்தப்படுகின்றன.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

உங்களை உங்களுக்கு தெரியுமா?

உங்களை_உங்களுக்கு_தெரியுமா?
இந்த உலகில் வாழும் நீங்கள் கூட ஒரு தனி உலகம், தெரியுமா?
மனிதர்களாகிய நாங்கள் அனைவருமே, இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அது சரி தானே? ஆனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும், உண்மையில் ஒரு தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அடடா, வழக்கம் போல் உங்களைக் குழப்ப ஆரம்பித்துவிட்டேன் என்று யோசிக்கின்றீர்களா? சரி சரி, குழப்பம் ஒன்றும் வேண்டாம், இதற்குப் பின்னால் அப்படி என்ன தான் மறைந்து இருக்கின்றது என்பதைத் தெரிய வேண்டுமென்றால் தொடர்ந்து படியுங்கள்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம் என்று கூறியிருந்தேன். ஆனால் அது யாருக்கு உலகமென்று தெரியுமா? ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்கே தெரியாமல் நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின், அதாவது Microscopeஇன் உதவியுடன் மட்டும் தான் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றைத் தீ நுண்மம் (Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மேலும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும் கிருமிகள் பலவிதமான நோய்களுக்குக் காரணமாக இருந்தாலும், மனித உடலில் வாழும் அனைத்துக் கிருமிகளும், நமது உடலின் செயல்பாட்டுக்கு மட்டும் இல்லாமல், நாம் உயிர் வாழ்வதற்கும் உதவுகின்றன என்றால் நம்புவீர்களா?
சரி, நமது உடலில் எத்தனை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் நூறு அல்லது ஆயிரம் இல்லை. பல கோடி கோடி (> 1.000.000.000.000.000) நுண்ணுயிரிகள் நமது உடலில் மற்றும் உடலினுள் வாழ்கின்றன என்பது தான் உண்மை! குறிப்பாகக் கிருமிகளை எடுத்துக்கொண்டால், புவியில் காணப்படும் கிட்டத்தட்ட 3.000.000 கிருமி வகைகளில், நமது உடலில் குறைந்தது 10.000 கிருமி வகைகள் வாழ்கின்றன! உதாரணத்திற்கு நமது வாயினுள் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான கிருமிகள் வசிக்கின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, நமது குடலில் வாழும் கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதில் வியப்பூட்டும் விஷயம் என்ன தெரியுமா? நமது உடலின் 99,9 சதவீதமான இடங்களில் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நமது உடலில் வாழும் இந்த அனைத்துக் கிருமிகளையும் ஒன்றாக எடுத்து, ஒரு தராசில் வைத்துக்கொண்டால், அதன் நிறை 2kg ஆக இருக்கும். நம்பவே முடியவில்லை அல்லவா?
சரி, இந்த நுண்ணுயிரிகள் பற்றிய தகவலை அறிந்ததும் உங்களுக்குத் தற்போது என்ன தோன்றுகின்றது? பயமாக இருக்கிறதா அல்லது அருவருப்பாக இருக்கிறதா?

சனி, 14 ஜனவரி, 2017

டாடா குரூப் சேர்மன் என். சந்திரசேகரன் - தமிழர் பெருமை

தமிழ்நாட்டில், மோகனூரில், கரும்பு, நெல், வாழை பயிரிடும் ஒரு வக்கீல் விவசாயியின் ( வயது 85 ) மகனாகப் பிறந்து, ஆரம்பத்தில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, கோவையில் சி.ஐ.டி.-யில் அப்ளைடு சயின்ஸஸ் படித்து, திருச்சி ஆர்.ஈ.சி. கல்லூரியில் கணினி சம்பந்தமான மேற்படிப்பு படித்து, ( கவனிக்கவும், இஞ்சினியரிங் அல்ல; நிர்வாகவியல் படிப்பும் அல்ல ! ) படிக்கும்போதே டி.சி.எஸ்.-சில் பயிற்சி மாணவனாகச் சேர்ந்து, பின்னர் அங்கேயே 1987-ல் வேலைக்கும் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அடைந்திருக்கும் உயரம் இது !
எப்பேற்பட்ட உயரம் இது: ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வணிகம், வருடம் ஒன்றில் ஏறத்தாழ ரூ. 25,000 கோடி லாபம், மொத்தம் 3,78,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு ப்ரும்மாண்டமான நிறுவனத்தின் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்! அதுவும் எப்படி? தன்னை முன்நிலைப்படுத்தாமல், எளிமையாக.
இவருடைய அன்ணன் திரு கணபதி சுப்ரமணியன், இதே டி.சி.எஸ்.-ன் COO-ஆகப் பொறுப்பேற்கிறார் இப்போது. இன்னொரு மூத்த சகோதரர் முருகப்பா குழுமத்தின் நிதி இயக்குனராக இருக்கிறார்!
ஆரம்பத்திலிருந்தே ஆங்கில மீடியத்தில் மட்டுமே படிக்காமலேயே, தனியார் பள்ளியில் மட்டுமே படிக்கமலேயே, B.E., B.Tech, M.B.A., படிக்காமலேயே, அடைப்புக்குறிக்குள் ( U.K., U.S.A. ) போடாமலேயே இந்த உயரத்தைத் தொடமுடியும் என நிரூபித்திருக்கிறார்.

திங்கள், 9 ஜனவரி, 2017

காலமிட்ட கட்டளை - கண்ணதாசன்

கடல்மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் – உண்ணும்
கனிமீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் – போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல்தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா
காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?
- கண்ணதாசன்

போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ?

🌙போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ?
போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? அதை விற்பவர்களுக்கு என்ன லாபம் ? எப்படி கண்டறிவது ? இந்த போலி முட்டைகளிடம் இருந்து மக்களை காக்கும் வழி என்ன ? என்பதை எல்லாம் நான் சிந்தித்து ஆராய்ந்து இந்த பதிவை எழுதுகிறேன்.
போலிமுட்டைகளின் தாயகம் சீனாவின் ஹெனன் மாநிலம். (Henan). மத்திய சீனாவில் இருக்கும் இந்த மாநிலம் சீனாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வட்டம். விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள். விவசாயம் கந்த பத்தாண்டுகளாக சரிவை சந்தித்துவருகிறது. பெரிய லாபம் இல்லாத தொழிலாக மாறி வருகிறது. அதனால் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த போலி முட்டை, போலி திராட்சை, போலி பன்றி குடல் போன்றவைகளை தயாரிக்கும் தொழில் செழிக்கிறது. சமீபகாலங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருவதாலும், ஏழு வேதிப்பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த முட்டை உண்டவர்களின் உடல்நலனில் ஏற்பட்ட கடும் பாதிப்பாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் இந்த போலி முட்டைகள் இப்போது மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும், சீனாவின் மிகவும் பின் தங்கிய சில மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏழு கெமிக்கல்கள் போட்டு தயாரித்த முட்டை என்று சொன்னேன் அல்லவா ? விலை எப்படி கட்டுப்படியாகிறது ? தயாரிப்பு செலவு அதிகம் ஆகுமே என நீங்கள் நினைக்கலாம். இந்திதியாவை பொறுத்தவரை இந்த ஏழு கெமிக்கல் முட்டையை வைத்து நாலு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம்.
நான் விசாரித்தவரையில் 360 முட்டை கொண்ட முமு பெட்டி - 7 டாலர். (டாலர் மதிப்பு 1 இந்திய ரூபாய்க்கு 60 என வைத்துக்கொண்டால் - 420 ரூபாய்.) போர் டுவெண்டி என்று பொருத்தமாக வந்துள்ளது பாருங்கள்.
சாதாரண பிராய்லர் கோழி முட்டை 360 - ஒரு முட்டை ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொண்டால் - 1800 ரூபாய்.
இது நாலு மடங்குக்கு மேல் லாபம்.
இந்த போலி முட்டையின் சுவை, சாதாரண பிராய்லர் கோழி / நாட்டுக்கோழி முட்டையின் சுவையை விட அதிகமாக இருக்கும். அதனால் மக்களால் வித்யாசம் கண்டுபிடிக்கவே முடியாது. சில முட்டைகளின் கெமிக்கல் காம்பினேஷன் அரைகுறையாக இருந்தால் மஞ்சள் கரு கெட்டிப்பட்டு போய் காட்டிக்கொடுத்துவிடும். இதை பற்றிய விழிப்புணர்வு அரபு நாடுகளில் ஏற்கனவே உண்டு என்பதால் தான் சேட்டன்கள் போலி முட்டைகளை கண்டுபிடித்து ரிலையன்ஸ் / மோர் கடைகளை சூறையாடினார்கள். ஆனால் முட்டைகளை இந்தியா முழுமைக்கும் ஏற்றுமதி செய்யும் நம் தமிழ்நாட்டில், நம் சென்னையில், இந்த போலி முட்டைகள் லாபவெறி கொண்ட பெரிய டிஸ்டிரிபியூட்டர்களால் மாற்றி விற்கப்படுகிறது. உங்களுக்கு முட்டையை விற்கும் நாடார் அண்ணாச்சிக்கு அது போலி முட்டை என்று தெரியாது. அவரும் அதையே தான் ரெண்டு எடுத்து சாப்பிடுவார். இந்த பரிதாப நிலையை நான் எப்படி சொல்ல ?
எப்படி தயாரிக்கிறார்கள் ?
இந்த போலி முட்டையை தயாரிக்கும் முறை - முதலில் மஞ்சள் கருவை தயாரித்துக்கொண்டு, அதை குறிப்பிட்ட கெமிக்கல் கலவையில் கலந்து, அதனை பாரபின் மெழுகு / கால்சியம் கார்பனேட் கலவையில் போட்டால் கெமிக்கல் ரியாக்‌ஷன் மூலம் சில நிமிடங்களில் ஓடு உருவாகிவிடும்.
எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு டார்ச் லைட் எடுத்து முட்டையின் ஊடே அடித்து பார்த்தால், இயற்கையான காற்று ஓட்டைகள் அந்த முட்டையில் இருந்தால் அது பிராய்லர் / நாட்டுக்கோழி முட்டையாகும். முட்டை டிரான்ஸ்பரண்ட் ஆக இருந்தால் (transparent fake eggs allowing light to pass through so that objects behind can be distinctly seen.) அது போலி முட்டையாகும். ( முட்டைக்கு அந்த பக்கம் உள்ள பொருள் தெரியுது என்றால்).
எப்படி தடுப்பது ?
முன்பே சொன்னது போல இந்தியாவுக்கே முட்டை அனுப்பும் நாமக்கல் இருக்கும் இடம் நம் தமிழகம். நாமக்கல் முட்டை கழகம் முட்டை விலை நிர்ணயம் செய்து அனுப்புகிறது அல்லவா ? அதே கான்ஸப்ட் மூ லம் இந்திய மக்கள் மீதான சீனாவின் மறைமுக போரை தடுக்கமுடியும். நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அவசரமாக போர்க்கால அடிப்படையில் கூடவேண்டும்.
மாதம் முதல் தேதியில் நாமக்கல் முட்டை விற்பனை கழகம் ஒரு குறிப்பிட்ட சீலை அறிமுகப்படுத்தும். (ஸ்கார்ப்பியன் சிம்பல் நவம்பர் மாதம்).
முட்டை உற்பத்தியாளர்கள் அந்த சீலை போட்டுத்தான் முட்டையை விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
அந்த குறிப்பிட்ட சீல் இல்லாத முட்டையை மக்கள் வாங்க கூடாது.
ஒவ்வொரு மாதமும் சீலை மாற்றிவிடவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் போலி முட்டைகளை கண்டறியவும், விற்பனையாளர்கள் அந்த மாதம் அறிவிக்கப்பட்ட சீல் உபயோகப்படுத்துகிறார்களா என்பதையும் பரிசோதிக்க பறக்கும் படை அமைக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அமைத்துள்ள பறக்கும் படை ஓட்டல்கள், சிறு கடைகள் ஆகியவற்றில் முட்டைகளை திடீர் சோதனை செய்து அதில் சீல் இருக்கிறதா, ஒளி பாய்ச்சினால் இயற்கையான ஓட்டைகள் தெரிகிறதா அல்லது டிரான்ஸ்பரண்ட் போலி முட்டையா என்பதை கண்டறிந்து சட்டரீதியான வழக்கு போட்டு அபராதம் விதிக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் போலி முட்டைகளை கண்டறிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை ஊருக்கு ஊர் நடத்தவேண்டும்.
மக்கள் உடல் நலன் மட்டுமல்ல, இவ்வளவு நாள் உங்களுக்கு உணவிட்டு வந்த உங்கள் தொழிலுக்கே அணுகுண்டு போடக்கூட நிகழ்வு, கேன்ஸர் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது உங்கள் கடமை, எங்கள் உரிமை.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...