ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மன்னிக்க முடியாத மனித குல விரோதிகள்..!

லிய உடற்கட்டு
வண்ணச் சீருடை
கொலை ஒன்றே குறிக்கோளாய்
போர்ப் பயிற்சி..!

எல்லைக்கோட்டை
தாண்டி நிற்பவன்
எதிரியாவான்..
ஒரு போதும்
மனிதனாக மாட்டான்..!

கருவறுத்தல்
கடமையென்போம்..!
சிந்திய இரத்தம்
சிம்மாசனமாக..
அதிகாரத்தின் முன்னால்
ஆயுள் இழப்போம்..!

அன்பைக் கொன்று
அணுசக்திப் படைப்போம்
நிர்வாணத்தை நெய்து
தேசியக் கொடிகள் செய்வோம்..!

பசித்த குழந்தைகளின்
பரிதாப மரணத்தை மறக்க
ஆயுதங்கள் வாங்கி
ஆனந்தக் கூத்தாடுவோம்..!

உணவுக்கும் வழியின்றி
உருக்குலைந்து நிற்பவர்களுக்கு
வல்லரசுக் கனவுகளை
வாரி வழங்குவோம்..!

பண்டிகை கொண்டாட
பரிசளிப்போம்
எதிர்கால சந்ததிகளுக்கு
மெய்த் துப்பாக்கிகளை..!

குற்ற உணர்வுகள்
குறுக்கிடாமல் கொண்டாட
கொஞ்சம் மது
எப்போதும்
நிறைந்த போதைக்கு
தேசப் பக்தி

தேசப் பக்தர்கள் -
மன்னிக்க முடியாத
மனித குல விரோதிகள்..!

- கவிஞர் அமீர் அப்பாஸ்
( israthjahan.ameer@gmail.com)







கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...