செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

எச்சரிக்கை: பெருகிவரும் சைபர் கிரைம்

பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி குளியலறையில், ஆன் செய்யப்பட்ட நிலையில், கேமரா மொபைல்போன் சிக்கியது. சக மாணவியர் குளிப்பதை மொபைல்போன் கேமராவில் பதிவு செய்து, தன் காதலனுக்கு காண்பிக்கவே இவ்வாறு செய்ததாக மாணவி ஒப்புக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் நகரில் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி குளியலறையில், கடந்த 3ம் தேதி மாலை, விடுதியைச் சேர்ந்த மாணவி குளிக்கச் சென்றார். அப்போது அங்கு கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியுறச் செய்தது. குளியலறைக்குள், ஆன் செய்த நிலையில், கேமராவுடன் கூடிய மொபைல்போன் வைக்கப்பட்டிருந்தது. அம்மாணவி, விடுதி காப்பாளரிடம் புகார் செய்தார்.

போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சைபர் பிரிவு போலீசார், மொபைல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கி படிக்கும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சிக்கினார். போலீசார், அவரிடம் விசாரித்ததில், வயநாட்டில் இருக்கும் தன் காதலன் கண்டு ரசிக்கவே இவ்வாறு செய்ததாகவும், சக மாணவியர் குளிப்பதை படம் எடுப்பதற்காக தான் தனது கேமரா வசதி கொண்ட மொபைல்போனை அங்கு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்று ஏற்கனவே செய்திருப்பதாகவும் தெரிவித்த அவர், அவற்றை, தன் காதலனுக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து அவரது காதலனிடம் போலீசார் விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அப்பெண்ணின் அறையில் இருந்து லேப்-டாப் கருவியையும் போலீசார் கைப்பற்றினர். அம்மாணவியின் மொபைல்போன், லேப்-டாப் ஆகியவற்றில் வேறு ஏதாவது குளியல் மற்றும் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, திருவனந்தபுரத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு ஆய்வகத்திற்கு போலீசார் அவற்றை அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினமலர் - 07.02.2011




1 கருத்து:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தற்போது அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...