செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பெருமைமிகு இந்தியர் - 'பத்மபூஷண்' டாக்டர். ரெட்டி

ருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவரும், இந்திய மருந்து ஆராய்ச்சி துறையின் முன்னோடிகளில் ஒருவருமான அஞ்சி ரெட்டிக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. இந்திய மருந்தியல் துறையில் புதுமைகளையும், சாதனைகளையும் படைத்துள்ளதற்காக, இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டது புகழ் தரும் விஷயமாகும்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவரான அஞ்சி ரெட்டி, விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மஞ்சள் பயிரிடும் விவசாயி. டாக்டர் ரெட்டி, குண்டூர் கல்லூரியில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். மும்பை பல்கலையில் மருந்தியல் துறை பட்டப் படிப்பை முடித்தார். இதன்பின், புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக மையத்தில் வேதியியல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். கடந்த 1984ல், டாக்டர் ரெட்டி என்ற பெயரில் ஆய்வகத்தை துவக்கினார். துவங்கிய சில காலத்திலேயே, இந்திய மருந்தியல் துறையில் அபார வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியது. 1990களில், இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2005ல் இந்தியாவின் பிரபலமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் டாக்டர் ரெட்டியின் நிறுவனம், இரண்டாவது இடத்தை பிடித்து சாதித்தது.

இவரது நிறுவனத்தின் வெற்றிக்கு தாரகமந்திரமாக இருந்தது, விலை குறைவான மருந்துகள் தான். நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றுக்கு மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மிக அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்து வந்த காலத்தில், அதில் பாதியளவு விலை நிர்ணயித்து, இந்நிறுவனம் மருந்துகளை விற்பனை செய்தது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், மிக குறைந்த விலையில் இந்நிறுவனம் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்தது. தற்போது மருந்தியல் துறையை விட, சேவை செய்வதில் தான், டாக்டர் ரெட்டி அதிக ஆர்வமாக உள்ளார். இதற்காகவே, அதிகமான நேரத்தை அவர் செலவிடுகிறார். தன் வருவாயின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏழை மக்களின் பசியை போக்குவதற்கும், ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் செலவிடுகிறார். இதற்காக அறக்கட்டளை ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.

நன்றி: தினமலர்




கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...