திங்கள், 17 ஜனவரி, 2011

அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது

மிழிசைக்கு முதன்முதலாக அகராதி எழுதிய மதுரை இசை ஆய்வாளர் நா.மம்மது, தமிழக அரசின் பாரதியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழிசை அகராதி என்ற இந்நூலில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசையாசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

நூலாசிரியர் நா.மம்மது, ஏற்கனவே "தமிழிசை வேர்கள், தமிழிசை தளிர்கள், இழையிழையாய் இசைத் தமிழாய்' என்ற மூன்று நூற்களை வெளியிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இவரது வழக்கம். இதில், மோகனம், கல்யாணி உட்பட பண்கள் இலக்கியத்தில் எந்த இடங்களில் வருகிறது என்றும், அதை பாடிக்காட்டுவதும் இவரது முக்கியப் பணி.

"கல்லூரி காலத்தில் இருந்தே இசை நூற்களை படிப்பதில் ஆர்வம் உண்டு. எனது குடும்பத்தினர் அனைவரும் இசை ஆர்வம், கருவிகளை வாசிக்கும் திறன் உள்ளவர்களே. நான் கடந்த 10 ஆண்டுகளாக நூற்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது 300 ராகங்களை எடுத்து அவற்றின் வரலாறு, சுரங்கள், பாட்டு எவை என நூல் எழுதி வருகிறேன். ஒவ்வொரு ராகத்திலும் 20 நிமிடங்கள் பாடல்களை பாடி "சிடி' தயாரித்து நூலுடன் வழங்க உள்ளோம். 2012ல் இது வெளிவரும்,' என்கிறார் நா.மம்மது.

தொடரட்டும் அவர் சேவை!

நன்றி: தினமலர் (17.01.2011)

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...