வியாழன், 14 அக்டோபர், 2010

நூல் அறிமுகம்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள்  - ஆர்னிகாநாசர்
நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-28343385.

பெரியவர்கள், குழந்தைகள் படித்துத் தெளிவு பெறும் வகையில் நீதிக்கதைகள் என்ற சக்தி வாய்ந்த தொடர்பு முறையில் குர்ஆனை கொண்டும், நபிமொழிகளைக் கொண்டும் நூலை உருவாக்கியிருக்கிறார் ஆர்னிகா நாசர். இதில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான வகையில் உள்ளன. ஆசிரியரின் மொழி வளமை பளீரென கதைகளில் பிரதிபலிக்கிறது. உருவகக் கதைகளா? உண்மை கதைகளா? எனச் சந்தேகம் எழ வைப்பது இந்நூலின் தனி இயல்பு. கதைகளைக் கூறுபவர்களும், படிப்பவர்களும், கேட்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய தரமான படைப்பு.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...