எதற்காக இந்தியா?
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை
நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆகாதாம்!
யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல
பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது
ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது
மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ
குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ
எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?
-தமிழேந்தி
நன்றி: சிந்தனையாளன் (ஆக .2010)
periyarthalam.blogspot.com
செவ்வாய், 19 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமந்திரம்
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
Guiding light Jayanthi Somasundaram A fading signpost reads ‘Rayavaram 6 km’, directing visitors to a muddy lane. The nondescript, d...
-
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
இயற் பெயர்: புலப்பாக்க சுசீலா பிறப்பு: நவம்பர் 13 1935 (அகவை 75) பிறந்த ஊர்: விஜயநகரம், ஆந்திரா வசிப்பது: சென்னை இவர் தமிழ், தெ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக