திங்கள், 18 அக்டோபர், 2010

கிழவியும் சுருக்குப்பையும்..!

திமிர்ந்த தேகத்தின்

கனிந்த மார்பு

கோயில் மணியின்

நாவுகளாய் தொங்குகிறது..!


புடைத்த நரம்புகள்-

தளர்ந்த கயிற்றுக்கட்டிலாய்

கழன்று கிடக்கிறது..!


கேள்விக்குறியாய் வளைந்த

கூன்-

மண்ணைப் பார்க்கிறது..!

எதிர்காலத்தின் ஏக்கத்துடன்..!


நிழலும் பிரிகின்ற..

நேரத்தைப் பார்த்த படி

காலக் கடிகாரத்தின் முள்

நின்று போகும் சூழலை

எதிர்பார்த்து சுற்றுகிறது...!


தன்னைத் தவிர..

யாரும் துணையில்லை..!


தன்னைப் போலிருக்கும்

சுருக்குப்பையை மட்டுமே

நேசிக்கிறாள் கிழவி..!


- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com )

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...