செவ்வாய், 12 அக்டோபர், 2010

வார்த்தைகளுக்கு வசப்படாதவை

குழந்தைகளின் அழுகை-
அழுகை சார்ந்தது அல்ல..!
விருப்பமின்மையின் எதிரொலி..!

குழந்தைகளின் புன்னகை-
மகிழ்ச்சி சார்ந்தது அல்ல..!
மொழியின் தேவைகளற்றும்
புரிதல் நிகழ்ந்ததன்
நன்றி தெரிவித்தல்..!

சொற்களை விடவும்
ஓசைகளும்..சைகைகளும்
உயர்ந்த அர்த்தம் மிக்கவை.
என குழந்தைகள் நமக்கு
உணர்த்தி விடுகின்றன..!

குழந்தைகள் பிழைபட
பேசும் போதெல்லாம்
இலக்கணம் தவறி..
இலக்கியமாகின்றன..!

குழந்தைகள் ...
படைப்பின் ரகசியங்களை..
வியந்து இரசிக்கின்றன...!
தானே ஒரு வியக்கத்தக்க
படைப்பின் அதிசயம் ..
என்பதையும் மறந்து ..!

கவிஞர் அமீர் அப்பாஸ்
ராஜகம்பீரம்

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...